போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் கசிப்புடன் சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட வாதரவத்தை – பெரிய பொக்கணை பகுதியில் 30 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (05) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாதரவத்தை – பெரிய பொக்கணை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
சந்தேகநபர் தனது வீட்டிற்கு அருகே உள்ள காணி ஒன்றில், கசிப்பினை போத்தல்களில் அடைக்கும்போது காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சான்றுப் பொருட்களுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவுடன் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.