போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நாட்டை உலுக்கிய கோர விபத்து
கண்டி முல்கம்பல பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் வீதியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கண்டி ஹீருஸ்ஸகல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் அவரது சகோதரர் மற்றும் தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது