போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கிளிநொச்சி யுவதி யாழில் பலி
நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இச் சம்பவம் யாழ் வடமராட்சி பகுதியில் இடம் பெற்றுள்ளது.
அப் பெண் கிளிநொச்சி,பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜா அலன்மேரி (வயது 18) என்று தெரிய வந்துள்ளது.
சம்பவம்
பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்த யுவதி, மேலும் நால்வருடன் கடலில் நீராடியுள்ளார்.
பின்னர் கற்கோவளம் பகுதியில் உள்ள நீர் நிலை ஒன்றிலும் இறங்கி நீராடியுள்ளனர்.
அதன் போது குறித்த யுவதி நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் யுவதியுடன் கூட சென்றவர்கள் அவல குரல் எழுப்பியதை அடுத்து அருகில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் அங்கு விரைந்து யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் அங்கு யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.