போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருகோணமலையில் இடம்பெற்ற வித்தியசமான கண்காட்சி!
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெள்ளைமணல் நீரோட்டு முனை சுவீட் கிட்ஸ் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை மற்றும் கைப்பணி கண்காட்சியும் இடம் பெற்றது.
இந்த சந்தை நிகழ்வானது பாலர் பாடசாலையின் ஆசிரியை எம்.ஐ.இப்திகா பேகம் தலைமையில் இன்றைய தினம் (15-09-2022) இடம் பெற்றது.
இதில் சிறுவர்களின் மூலமாக சிறிய வகை பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகள் என பல உற்பத்திகளை கொண்டதுமான பொருட்களை காட்சிப்படுத்தினர்.
இதில் பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம்.நௌபர், தனியார் நிறுவன தேசிய பணிப்பாளர் ஏ.ஹிதாயத்துள்ளா, சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் கே.அமுதியா உட்பட பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.