போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
உணவில் கூட மதப் பிரிவினையா??
இந்தியாவில் வாடிக்கையாளர் ஒருவர் ஆன் லைனில் உணவு ஆர்டர் செய்த போது முஸ்லிம் டெலிவெரி மேன் வேண்டாம் என குறுந்தகவல் அனுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவை உண்ணும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆன்லைனில் உணவு டெலிவரி நிறுவனங்களில் கல்லுாரி பயிலும் மாணவர்கள் , இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் ஹைதராபாத்தில் சேர்ந்த ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்தபோது அவர் ஒரு பதிவை ஸ்விக்கி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.
அதில் உணவை டெலிவரி செய்ய முஸ்லிம் மத்தத்தைச் சேர்ந்தவரை அனுப்ப வேண்டாம் என வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்து
இந்நிலையில் வாடிக்கையாளரின் குறுந்தகவலை தெலுங்கானா மாநில டாக்ஸி மற்றும் டிரைவர்கள் ஜேஏசியின் தலைவர் ஷேக் சலாவுதீன் என்பவர் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்ட நிறுவனத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை அண்மையில் ஹைதராபாத்தில் முஸ்லிம் டெலிவரி மேன் கொண்டுசென்ற உணவை ஆர்டர் செய்த நபர் வாங்க மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.