போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் கொள்ளைச் சம்பவம்
கண்டி நகரில் பாடசாலை மாணவர்களை பயமுறுத்தி அவர்களின் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து வரும் குண்டர் கும்பல்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனக் கூறிக்கொண்டு, பாடசாலை மாணவர்களின் பணப்பைகள் மற்றும் புத்தகப் பைகளை சோதனையிட்டு அவர்களிடம் இருந்து பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை வலுக்கட்டாயமாகப் பறிக்கும் இந்தக் குழுக்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பணத்தை திருடும் நபர்கள், பொலிஸாருக்கு தகவல் கொடுத்தால் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என மாணவர்களை அச்சுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் காதலர்களை மிரட்டி பணம் கொள்ளை
அச்சம் காரணமாக இந்த சம்பவங்களை எதிர்கொண்ட பெரும்பாலான மாணவர்கள் முறைப்பாடு செய்வதில்லையெனவும் கூறப்படுகிறது. இதை பற்றி முறைப்பாடுகள் செய்யப்படவில்லை.
குறிப்பாக சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சமீபகாலமாக படிப்பை பாதியில் நிறுத்தும் சிறுவர்கள் இந்த கொள்ளையர்களின் இலக்காக மாறியுள்ளனர்.
மாணவர்கள் அணிந்திருக்கும் கால்சட்டை, காலணிகள், மற்றும் கடிகாரங்கள் கொள்ளையிடப்படுவதாக கூறப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக கண்டி, மாத்தளை புகையிரத மற்றும் உடவத்த கலே பிரதேசங்களில் மாணவர்கள் மற்றும் இளம் காதலர்களை மிரட்டி பணம் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும், அவசர அழைப்பை மேற்கொள்ள பெண்களிடம் கையடக்கத் தொலைபேசியைக் கேட்டும் அதனைக் கொடுக்காமல் தப்பியோடிய கும்பல் ஒன்றும் கண்டி நகரில் சுற்றித்திரிகிறது.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் செல்போன்களை துண்டு துண்டாக விற்பனை செய்வதால் அவற்றை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்