போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அரச ஊழியர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
அரச ஊழியர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலிற்கான வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு மார்ச் 09ஆம் திகதியிலிருந்து தேர்தல் தாமதமாகும் போது உரிய அதிகாரியின் அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்
இது தொடர்பான பரிந்துரை அரச நிர்வாகச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாக செயலாளருக்கான அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.