போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்பிற்கு குளிர்கால விமானங்களை மீண்டும் இயக்க ஆரம்பித்த நிறுவனம்!
கொழும்பிற்கு சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் தனது குளிர்கால விமானங்களை மீண்டும் இயக்க ஆரம்பித்துள்ளது.
Lufthansa குழுமத்தின் உறுப்பினரான Edelweiss/Swiss International Air Lines, சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கான நேரடி இடைநில்லா விமானங்களை இன்றைய தினம் மீண்டும் தொடங்கியது.
சூரிச்சிலிருந்து கொழும்புக்கு LX 8068 என்ற முதலாவது விமானம் இன்றைய தினம் நண்பகல் 12:20 மணியளவில் 125 பயணிகளுடன் வந்தடைந்தது.
இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் பயணிகள் கண்டிய பாரம்பரிய நடன நிகழ்ச்சியின் மூலம் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.
இலங்கையில் லுஃப்தான்சா குழுமத்தின் பொது விற்பனை முகவரான (GSA) யுனைடெட் வென்ச்சர்ஸ் குழுமத்தால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொழும்புக்கான வாராந்திர விமான சேவையாக இது இயக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சுவிஸ் தூதுவர் மேதகு டொமினிக் ஃபர்க்லர், சுவிஸ் விமான சேவையின் மீள் ஆரம்பத்தைக் குறிக்கும் முகமாக அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில்,
“இலங்கைக்கு மீண்டும் வருக என்ற பதத்தினை அடிப்படையாகக் கொண்டு” சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமானத் தொடர்பை மீண்டும் தொடங்குவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இது எங்கள் இரு நாட்டு மக்களையும் நெருக்கமாக்குகிறது. சுற்றுலாவை மேம்படுத்துகிறது. இந்த விமானங்களை மீண்டும் ஆரம்பிப்பதானது சுவிஸின் இலங்கைக்கான ஆர்வத்தையும் பாராட்டையும் குறிக்கிறது.
அத்துடன், சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, நிதி, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இது உதவும். என வாழ்த்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய விமான வருகையும் சுற்றுலாப் பயணிகளை விமான நிலையத்தின் வரவேற்பு உபசாரத்தின் படங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.