போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு இராஜரட்ணம் இராஜநாயகம்
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு சிற்பனை, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Ohio Cincinnati ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் இராஜநாயகம் அவர்கள் 06-05-2023 சனிக்கிழமை அன்று Ohio Cincinnati இல் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இராஜநாயகம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,இரதிதேவி(பத்மா) அவர்களின் அன்புக் கணவரும்,Dr. பத்மராஜா(ரவி- ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ஆனந்தராஜா(ரகு) மற்றும் சரஸ்வதி(ரமா- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயகுகன்(பிரித்தானியா), Dr. சிவாணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுவீனா(பிரித்தானியா), எலானி(பிரித்தானியா), மிலா(பிரித்தானியா), தமிழினி((ஐக்கிய அமெரிக்கா), அரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்மா, பாலசுப்ரமணியம், சொர்ணலிங்கம் மற்றும் சண்முகவடிவு, காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் சுசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.