போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு சின்னையா வாமதேவன்
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலை மயிலிட்டியை வசிப்பிடமாகவும், சிறுவிளானை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னையா வாமதேவன் அவர்கள் 06-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நவநீதன், நவநிதி, நவஜோதி, நவக்குமாரன், நவசீலன், நவரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற நாகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜி, புஸ்பராஜா, சந்திரன், சந்திரலோஜினி, கலைவாணி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனிபா, டினோஜன், சரண்ஜன், சந்துசன், சஜிந்தன், கரணி, சபிக்சன், இலக்கியன், டபிலான், துசாணா, புவிசான், நிகானா, கேசியா, நவீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.