போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஜனாதிபதி ரணில் ஐ.தே.கட்சியிலிருந்து விலகி மொட்டுக்கு வரவேண்டும்!
![ஜனாதிபதி ரணில் ஐ.தே.கட்சியிலிருந்து விலகி மொட்டுக்கு வரவேண்டும்!](http://itamilnews.com/wp-content/uploads/2024/07/1.webp)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் எந்தவொரு நபரின் பெயரையும் முன்வைக்கவில்லை. சரியான நபர் சரியான நேரத்தில் முன்வைக்கப்படுவார். எங்கள் கட்சி மொட்டு சின்னத்தின் கீழ் வேட்பாளரை முன்னிறுத்தும் என்றார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் மொட்டு சின்னத்திலேயே முன்னிறுத்தப்படுவார். எனவே ஜனாதிபதி ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி மொட்டு கட்சியின் உறுப்புரிமைய பெற வேண்டும் எனவும் , அப்படி அவர் செய்வரானால் வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.