போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எப்படி ஓய்வைக் கழிக்கின்றார் தெரியுமா?
![முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எப்படி ஓய்வைக் கழிக்கின்றார் தெரியுமா?](http://itamilnews.com/wp-content/uploads/2023/07/23-64aede01c5a6d.jpg)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உலகம் சுற்றும் பெண்ணாகத் திகழ்ந்து வருவதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை,
அரசியலில் ஓய்வு பெற்ற பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஓய்வைக் கழிப்பார்கள். சிலர் சமூக சேவைகளில் ஈடுபடுவார்கள், சிலர் திரைமறைவில் இருந்து அரசியல் செய்வார்கள்.
எனினும், சந்திரிகா அம்மையார் எப்படி அந்த ஓய்வைக் கழிக்கின்றார் தெரியுமா?
தனது பிள்ளைகளுடன் – பேரப்பிள்ளைகளுடன் ஒவ்வொரு நாட்டுக்கும் அவர் சுற்றுலா சென்று பொழுதைக் கழிக்கின்றார்.
அவர் சமீபத்தில் அவர் எகிப்துக்குச் சென்றிருக்கின்றார்.
மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த வாரம் நாடாளுமன்றில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது அவர்களின் முக்கிய தலைப்பே இதுதான்.
உண்மையில் சந்திரிகா மெடம் போலத்தான் ஓய்வைக் கழிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள் – என்றுள்ளது.
இவ்வாறு இருக்கையில், சந்திரிகா அம்மையாரை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டுவரவும் திரைமறைவில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.