போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பாடசாலை மாணவன் பலி
![இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பாடசாலை மாணவன் பலி](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/2-12.jpg)
பொலன்னறுவை, பக்கமுனை – கிரித்தலை பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயர்தரத்தில் கல்வி கற்கும் நிக்கபிட்டிய பகுதியைச் சேர்ந்த லகிது பின்சர என்ற 18 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவன் தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளின் பயணித்த போது வீதியில் பயணித்த லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தள்ளனர்.