போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கையில் மர்ம பொருளுடன் அதிரடியாக சந்தேக நபர் கைது
![இலங்கையில் மர்ம பொருளுடன் அதிரடியாக சந்தேக நபர் கைது](http://itamilnews.com/wp-content/uploads/2024/05/6-8.jpg)
களுத்துறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
பாணந்துறை வலப்பன பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 850 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கைத்தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.