உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயத்தில் மீண்டும் வழிபாட அனுமதி!

கடந்த 30 அண்டுகளாக கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இன்று (16-08-2024) ஆலயத்திற்கு நிர்வாகத்தினரும் மக்களும் செல்லவுள்ள நிலையில் பொங்கல் வழிபாடுகளும் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் வாரங்களிலும் வெள்ளிக் கிழமைகளில் வழிபாடுகளுக்கு மக்கள் செல்லமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை ஆலயத்திற்க்கு செல்வதற்கும் சிரமதானப் பணிகளில் ஈடுடவும் அடியவர்களை கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.