போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
காதலுக்காக குழுக்களுக்கிடையே மோதல் ; 17 வயதுடைய மாணவன் வைத்தியசாலையில்
![காதலுக்காக குழுக்களுக்கிடையே மோதல் ; 17 வயதுடைய மாணவன் வைத்தியசாலையில்](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/6-15.jpg)
காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் 16 முதல் 18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மெனிக்கின்ன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் எம்.டி.சந்திரபால தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.