உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சகோதரனுடன் சேர்ந்து மனைவி அரங்கேற்றிய சம்பவத்தால் அதிர்ச்சி

குடும்ப தகராறு முற்றிய நிலையில் மனைவி உள்ளிட்ட சிலர், கணவனை வெட்டி படுகொலை செய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 42 வயதுடைய நபர் ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி, தனது சகோதரனை வீட்டுக்கு வரவழைத்ததாகவும், அவரின் உதவியுடன் இந்த கொலையை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மொரட்டுவ, ரதுகுருசாவத்த, லக்ஷபதிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.