உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சுகாதார துறையினரின் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார துறையினரின் மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கை மேல் மாகாணத்திலும் இன்று அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று (2024.05.21) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4 மணித்தியாலங்களுக்கு இந்த வேலைநிறுத்தம் அமுலில் இருக்கும் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.