உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
டிஜிட்டல் மயமாகவுள்ள அரச நிறுவனங்களின் கட்டணங்கள்!
இலங்கையில் அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் முதல் அரச நிறுவனங்களின் அனைத்து கட்டணங்களும் டிஜிட்டல் முறை மூலம் பெற்றுக்கொள்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டல்கள் இந்த ஆண்டு (2022) செப்டெம்பர் மாதம் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இணையப் பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.