போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுவிப்பு!
![தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுவிப்பு!](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/3-4.jpg)
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவியதாக தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் ஆயப்பகுதி அதிகாரி கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான கதிர்காமநாதன் மகிந்தன் அல்லது வெண்ணயனன் என்பவருக்கு உதவியதாகத் தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராகச் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கில் இருந்து முன்னாள் ஆயப்பகுதி அதிகாரி கந்தையா யோகநாதனை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று உத்தரவிட்டார்.