போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தீயில் கருகி தம்பதிகள் உயிரிழப்பு
![தீயில் கருகி தம்பதிகள் உயிரிழப்பு](http://itamilnews.com/wp-content/uploads/2024/07/2.webp)
யட்டியந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயின் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் தம்பதிகள் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து இன்று அதிகாலை 01 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 55 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினரே உயிரிழந்துள்ளனர். அத்துடன், தீ விபத்தினால் 5 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், வீடுகளிலிருந்த பொருட்களும் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.