Saturday October 25, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இலங்கை செய்திகள்

புதிய கடற்றொழில் வரைபு ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

February 23, 2024 0 Comment
 புதிய கடற்றொழில் வரைபு ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.நா. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே தலைமையிலான பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று கடற்றொழில் அமைச்சில் கடந்த (21.02.2024) ஆம் திகதி  இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை கடற்றொழில் சமூகத்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்காக FAO அமைப்பின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் தற்போது வரைபு மட்டத்திலுள்ள புதிய கடற்றொழில் சட்டத்தை ஒரு மாதத்திற்குள் கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி அமைச்சரவையின் அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவித்தார்.

இச் சட்டத்தை தயாரிப்பதற்கு FAO தரப்பில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை கடற்றொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் எமது அறுவடைக்குப் பின்னரான பதிப்புகளை தடுப்பதற்கும் எது நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் FAO அமைப்பின் உதவி மற்றும் ஆலோசனை தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் குறிப்பாக எதிர்காலத்தில் மீன்வளம் அழிவடையும் அபாயம் இருப்பதால் கூடுகளில் மீன்களை வளர்ப்பதற்கான உதவிகளை செய்து தருமாறும் இது உலகெங்கும் நடைமுறையில் உள்ள விடயம் என்பதால் மோதா போன்ற மீன் இனங்களை வளர்ப்பதற்கு உதவி பரியுமாறும் FAO பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை மீனவர்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர் தற்போது எமது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மீட்சிபெறும் வரை கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதன் போது FAO பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே கருத்து தெரிவிக்கையில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிககைள் தொடர்பாக தமது அமைப்பு சாதகமாக பரிசீலிக்குமெனவும் இலங்கை கடற்றொழிலளார்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பில் தமது அமைப்பு சாதகமாக பரிசீலனை செய்யுமெனவும் புதிய கடற்றொழில் வரைபை உருவாக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய அரப்பணிப்பை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நயனா குமாரி சோமரத்ன FAO அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email