போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பொசன் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
![பொசன் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/13-1.jpg)
பொசன் பண்டிகை காலத்தில் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து மிஹிந்தலை, தந்திரிமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு குறித்த பேருந்து சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை, அநுராதபுரம் ஆகிய நகரங்களுக்கு வரும் மக்களின் வசதிக்காக உரிய பஸ் சேவை அமுல்படுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித அல்விஸ் தெரிவித்தார்