போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பொலிசாருக்கு லஞ்சம் கொடுத்தவருக்கு நடந்த சம்பவம்
![பொலிசாருக்கு லஞ்சம் கொடுத்தவருக்கு நடந்த சம்பவம்](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/19-5.jpg)
பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50,000 ரூபா இலஞ்சமாக வழங்க முற்பட்ட நபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக நாகொல்லாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக இவ்வாறு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹிரியால அம்பகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 28 வயதுடைய இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபர்கள் இன்று மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.