உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தொடரூந்தை நிறுத்த மறந்த இயக்குனர்

கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் இருந்து கொஸ்கம நோக்கிப் பயணித்த தொடரூந்தின் இயக்குனர் நேற்று மாலை 4 மணியளவில் கிருலப்பனை தொடரூந்து நிலையத்தில் தொடரூந்தை நிறுத்த மறந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொடரூந்து திணைக்களம் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
தொடரூந்து இயக்குனரின் இந்த செயலின் காரணமாக கிருலப்பனை தொடரூந்து நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் நுகேகொட நிலையத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சில பயணிகள் அங்கு அமைதியற்ற முறையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.