உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பெங்கொக்கில் இருந்து இலங்கை வந்த மூன்று பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் நேற்று இரவு பெங்கொக்கில் இருந்து வந்த இப்பெண்கள் விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 25, 48 மற்றும் 50 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பெண்களிடம் முறையே 1 கிலோ 104 கிராம், 1 கிலோ 856 கிராம் மற்றும் 2 கிலோ 288 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.