உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாத குழந்தை ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் எனும் குழந்தையே இவ்வாறு இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிகமாக தெரியவந்த தகவல்களில், கடந்த மே 22ஆம் திகதி, குழந்தைக்கு சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, முதலில் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மே 24ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட மரண விசாரணையின் பின்னர், குழந்தையின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் மறைவு குடும்பத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.