போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருட்கள்!
![தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருட்கள்!](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/1-4.jpg)
முல்லைத்தீவு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 992 விமான எதிர்ப்பு தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தேவிபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே நேற்று (10-06-2024) இந்த தோட்டாக்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கிணற்றை சுத்தம் செய்வதற்கு உரிமையாளர் தயாரான போது, கிணற்றில் தகர பெட்டியின் ஒரு பகுதி காணப்பட்டுள்ளது.
இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விமான எதிர்ப்பு தோட்டாக்களை எடுத்துள்ளதுடன், முல்லைத்தீவு நீதிமன்றத்திலும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தோட்டாக்கள் வெடிக்காமல் நல்ல நிலையில் இருப்பதாகவும், போரின் போது யாரோ ஒருவரினால் இவை கிணற்றில் போட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் விமான எதிர்ப்பு தோட்டாக்களை வெடிக்கச் செய்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.