உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

2025 ஏப்ரல் மாதத்தில் மட்டும் 174,608 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை மொத்தமாக 896,884 சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் வருகை தந்துள்ளனர்.
அதிகபட்ச பயணிகள் வந்த நாடுகள்: இந்தியா – 38,744, ஐக்கிய இராச்சியம் – 17,348, ரஷ்யா – 13,525, ஜெர்மனி – 11,654, அவுஸ்திரேலியா – 10,744, சீனா – 8,667, பிரான்ஸ் – 8,276
இந்த தரவுகள், இலங்கையின் சுற்றுலா துறையின் மீட்சி மற்றும் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, பண்டிகை காலங்களில் ஏற்பட்டுள்ள பயணத்தினை முன்னிட்டு வருகை எண்ணிக்கைகள் உயரும் போக்கைக் காணலாம்.