உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பிரபல நடிகை மாலினியின் இறுதிக்கிரியை

இலங்கை திரையுலகில் புகழ் பெற்ற முன்னணி நடிகையாக விளங்கிய மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை இன்று (26) நடைபெறவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த மாலினி பொன்சேகாவின் பூதவுடல் நேற்று (25), தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8.00 மணிக்கு கொழும்பு 7 சுதந்திர சதுக்க மாளிகைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அங்கு காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் 3.30 மணியளவில், அவரது கல்வி நிலையமான களனி குருகுலக் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் திரையுலகக் கலைஞர்கள் இணைந்து பௌத்த மதச் சடங்குகளுக்காக அமைக்கப்பட்ட மேடைக்கு அவரது பூதவுடல் கொண்டு செல்லப்படவுள்ளது.
மத சடங்குகளுக்கு பின்னர், திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பு மற்றும் வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூரும் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, பிற்பகல் 5.45 மணியளவில் மாலினி பொன்சேகாவின் பூதவுடல் தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.