உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; ஒருவர் பலி

செட்டிக்குளம்-பூவரசன்குளம் வீதி, தட்டான்குளம் சந்தியில் இன்று மோட்டார் சைக்கிள் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். பக்கவாட்டு வீதியில் திரும்பிய மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் மருத்துவமனையின் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயங்களுடன் வவுனியா மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.