உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கண்டி வறக்காப்பொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயம்

வறக்காப்பொல – தும்மலதெனிய பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (11) இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாகன விபத்து காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியொன்றும் பஸ்ஸொன்றும் மோதியதாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.