உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
33 மில்லியனுக்கு அதிகமான வரி ஏய்ப்பு செய்த ஜனக ரத்நாயக்க !

33 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான VAT மற்றும் வருமான வரியை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
ஜனக ரத்நாயக்க, கிருலப்பனை பிரதேசத்தில் இயங்கி வந்த கணனி சேவை வழங்கும் நிறுவனம் சார்பாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 33 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான VAT மற்றும் வருமான வரி செலுத்த்த வில்லை என கூறப்படுகின்றது.