உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக இந்தியாவில் சீமான் தலைமையில் திரண்ட மக்கள் கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கோவையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக ஒரு பொதுக்கூட்டம் வெற்றி கூடியது.
நிகழ்வில் கலந்துகொண்ட சீமான், தமிழ் மக்களின் வரலாற்று நிலைமையையும், அந்த வரலாற்றில் எதிர்கொண்ட வலிகளையும் எடுத்துரைத்து, தமிழீழம் மற்றும் தமிழ் தேசிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு எழுப்பும் அவரது உறுதியான குரலை வெளியிட்டார்.
சீமான் தெரிவித்ததாவது “வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டு, சொந்த மண்ணில் அடிமைகளாக வாழ்வதைக் கண்டு வருகிறோம். தமிழ் தேசிய மக்கள் நமக்கென்று குரல் எழுப்ப ஒருத்தர் இல்லாமல் போராட்ட சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். எனினும், மாபெரும் தலைவர்களும், தமிழீழத்தையும் தமிழையும் வலுவாக வளர்த்து வருகின்றனர் நம் தமிழ் மக்கள்.”
மேலும், தமிழ் மக்களின் வரலாற்றுப் பாதை, வலிகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து அவர் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் தாயின் வரலாற்றில் மாபெரும் தலைவராக பிறந்த எம் தலைவர், அனைத்து தமிழ் மக்களும் வாழ வேண்டும் என்று விரும்பியதால் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டம் தமிழீழ நினைவுநாள் முன்னிட்டு இந்தியாவில் நடைபெற்ற பெரிய மக்கள் கூட்டம் என்ற வகையில் தமிழ்நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.