Thursday October 23, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Colombo News

ATM அட்டை பயனாளருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

September 12, 2022 0 Comment
 ATM அட்டை பயனாளருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான ATMகளுக்கு பலமுறை வந்து நுட்பமான முறையில் பலரின் ATM அட்டைகளில் பணம் திருடியவர் கடுவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் உள்ள ATMகளில் நபர் ஒருவர் பல்வேறு நபர்களின் ATM அட்டைகளை மோசடியான முறையில் திருடுவதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

அதற்கமைய, அந்தந்த வங்கிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ATM நிலையங்களுக்கு அருகே வரும் நபர் தனது அட்டை இயந்திரத்தில் சிக்கியதாகவும், அதனை பெற வங்கிக்கு அழைப்பேற்படுத்த வேண்டும் என கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வங்கியின் இலக்கத்தை பெற அங்கு வரும் மக்களின் அட்டையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்னர் அந்த அட்டைக்கு சமமான வேறு அட்டை ஒன்றை வழங்கிவிட்டு சந்தேக நபர் அங்கிருந்து சென்றுவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் திருடப்பட்ட அட்டையை பயன்படுத்தி வேறு ATM இயந்திரத்தில் இருந்து பணம் முழுவதையும் எடுத்துள்ளார். பல வங்கிகளில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சந்தேக நபரை கடுவெல பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபர் மல்வான மற்றும் சேதாவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது. அவர் போதைப்பொருளுக்கு அடிமையான 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்த 8 வங்கிகளுக்கு சொந்தமான 30 அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் மாலபே, பியகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் 40 தடவைகளில் இந்த அட்டைகளை பயன்படுத்தி 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email