போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நாடு திரும்பவிருந்த பெண்ணுக்கு வெளிநாட்டில் நேர்ந்த துயரம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்
குவைத்தில் 7 வருடங்கள் வேலை செய்து இலங்கை திரும்பவிருந்த பெண் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மாத்தளை யட்டவத்த பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய ஜி.அனோமா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
மரணத்தில் சந்தேகம்
உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், அரசாங்கம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் குவைத் சென்றுள்ளார்.
அங்கு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த அவர், ஏப்ரல் 26 ஆம் திகதி தாய்நாட்டிற்குத் திரும்பத் தயாராக இருந்தார். இதுபற்றி அவர் தனது தாயாருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி தெரிவித்துள்ளார்.
மகன் சதுரங்க தம்மிக்க தனது தாயை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார், ஆனால் அவர் வரவில்லை. இதனையடுத்து குழப்பமடைந்த அவர், விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை.
தேடிச்சென்ற நண்பர்களுக்கு அதிர்ச்சி
தாயார் நாடு திரும்பாமை தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில் விமான நிலைய அதிகாரிகளிடம் போலீசார் விசாரித்தபோது, குவைத்தில் இருந்து அனோமா விமானம் ஏறவில்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரது நண்பர்கள் சிலர் அவர் வேலை செய்த குவைத் வீட்டுக்குச் சென்றபோது அவர் தூக்கிட்டு இறந்துவிட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறினார்.
குவைத் தூதரகத்தின் ஊடாக கிடைத்த தகவலின் படி குவைத் மாநிலத்தில் இரண்டு இலங்கையர்களின் சடலங்கள் இருப்பதாகவும் அதில் ஒன்று தன தாயாரின் சடலம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அனோமாவின் மகன் தம்மிக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாய் தூக்கிலிட எந்த காரணமும் இல்லை என கூறும் குடும்பத்தினர் , பெண்னின் மரணம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.