உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வீடொன்றில் 18 வயது இளைஞனுடன் 2 மாதங்கள் தங்கியிருந்த 14 வயது சிறுமி!

மாத்தளையில் வீடொன்றில் 14 வயதுடைய சிறுமி ஒருவருடன் 2 மாதங்கள் தங்கியிருந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதன்போது குறித்த இளைஞனுக்கு உதவிய மேலும் மூவரையும் அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அலவத்துகொடையில் வசிக்கும் பெண்ணொருவர் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இரவு முதல் தனது பேத்தி காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சிறுமி தனது காதலனுடன் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.