உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழர் பகுதியொன்றில் பரபரப்பு சம்பவம்… வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த எமன்!

வவுனியா மாவட்டம், கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்திற்குள் 5 அடி நீள முதலை ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் வளாகத்திற்குள் முதலை நுழைவதை அவதானித்த உரிமையாளர் வனஜூவராசி திணைக்களத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து வந்த வனஜூவராசிகள் அதிகாரிகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் முதலையினை பிடித்து காட்டில் பாதுகாப்பாக விடுவித்துள்ளனர்.