போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
விசேட சுற்றிவளைப்பு ; போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 685 பேர் கைது
![விசேட சுற்றிவளைப்பு ; போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 685 பேர் கைது](http://itamilnews.com/wp-content/uploads/2024/06/15.jpg)
நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 26 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில்,போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 6 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 176 கிராம் ஹெரோயின், 667 கிராம் ஐஸ், 715 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.