உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 7.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த மே மாதத்தில் மாத்திரம் ரூபாவின் பெறுமதி 1.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.