உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,
கொட்டடி பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது அவரது உடைமையில் இருந்து 120 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.