Monday October 20, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இலங்கை செய்திகள் செய்திகள்

இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன் சிறுவன் திருடிய பணம்… கோவை தொழிலதிபர் செய்த நெகிழ்ச்சி செயல்

December 13, 2024 0 Comment
 இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன் சிறுவன் திருடிய பணம்… கோவை தொழிலதிபர் செய்த நெகிழ்ச்சி செயல்

இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டொன்றில் 37 ரூபாய் 50 காசு திருடிய 10 வயது சிறுவன் தற்போது கோவையில் தொழிலதிபராக உள்ள சம்பவம் ஒன்று அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இந்த திருட்டு சம்பவம் அவரது மனதை உறுத்திய நிலையில் பணத்தை திருடிய வீட்டின் வாரிசுகளை தேடிக் கண்டுபிடித்து ரூ.3 லட்சம் திருப்பி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை – நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் சுப்பிரமணியம் என்பவர் பணியாளர்களாக இருந்துள்ளார். இவரது மனைவி எழுவாய். இவர்கள் இருவரும் 1970 ம் ஆண்டில் அங்கிருந்த வீட்டை காலி செய்தனர்.

வீடு காலி செய்தபோது உதவிக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுவன் ரஞ்சித்தை அழைத்தனர். ரஞ்சித் அந்த தம்பதிக்கு உதவி செய்தார்.

இச்சமயத்தில் தலையணைக்கு அடியில் 37 ரூபாய் 50 காசு இருந்ததை ரஞ்சித் பார்த்துள்ளார். பின்னர் தனது குடும்பம் வறுமையில் வாடுவதை நினைத்த அவர் வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் ரூ.37.50யை திருடி வைத்து கொண்டார். அதன்பிறகு 1977ம் ஆண்டில் தனது 17 வயதில் ரஞ்சித் பிழைப்பு தேடி தமிழகம் வந்துள்ளார்.

கோவையில் அவர் பல்வேறு பணிகளை செய்தார். வறுமையில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு தற்போது தொழிலதிபராக உள்ளார். ரஞ்சித் தற்போது கோவையில் கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இருப்பினும் ரஞ்சித்திற்கு சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதி வீட்டில் 37.50 காசு திருடிய சம்பவம் உறுத்தி கொண்டே இருந்தது. எப்படியாவது அந்த பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

இதையடுத்து சுப்பிமணியம் – எழுவாய் தம்பதி பற்றி அவர் விசாரித்து வந்துள்ளார். அப்போது அந்த தம்பதி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அண்மையில் இலங்கை சென்ற ரஞ்சித் அங்கிருந்த சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதியின் 3 மகன்களின் குடும்பத்துக்கு தலா ரூ.70 ஆயிரம் வழங்கினார். அத்தோடு புத்தாடைகளும் வாங்கி கொடுத்தார்.

மேலும், சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதியின் மகள் செல்லம்மாள் திருச்சியில் இருப்பதை அறிந்த ரஞ்சித் அங்கு சென்று அவருக்கு புத்தாடை வழங்கியதோடு ரூ.70 ஆயிரத்தை வழங்கினார்.

இப்படியாக இலங்கையில் திருடிய 37.50 ரூபாய்க்காக 50 ஆண்டுகள் கழித்து பணத்தை இழந்த தம்பதியின் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சத்தை ரஞ்சித் வழங்கிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

இதற்கிடையே தான் கோவையில் உள்ள ரஞ்சித்தை, சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதியின் பேத்தி பவானி சந்தித்து நன்றி கூறினார்.

அப்போது அவர், ‛‛அவர் (ரஞ்சித்) வீட்டில் காசு எடுத்ததாகவும், அதனை திரும்ப தருவதாகவும் கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இந்த காலத்தில் இப்படியொரு ஆளா? ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்றார்.

இதுதொடர்பாக ரஞ்சித் கூறுகையில்,

‛‛நான் பணத்தை அவர்களின் வாரிசுகளுக்கு கொடுத்த தருணம் எதிர்பாராத ஒன்று. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஒருவருக்கொருவர் பார்த்தபோது பண சந்தோஷத்தை விட.. மன சந்தோஷம் அதிகமாக இருந்தது. அதனை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. எனக்கு கடன் என்று யாரிடமும் இருக்க கூடாது. இதனால் தான் பணத்தை தேடி கொண்டு போய் கொடுத்தேன்” என்றார்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email