Friday October 24, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இலங்கை செய்திகள் செய்திகள்

முகநூல் நட்பால் 29 இலட்சம் இழந்த யாழ் நபர்; மக்களே அவதானம்

February 27, 2025 0 Comment
 முகநூல் நட்பால் 29 இலட்சம் இழந்த யாழ் நபர்; மக்களே அவதானம்

முகநூலில் நட்பால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,

பேஸ்புக்கில் மாக் என்பவருடன் நட்பு வேண்டுகோள் வந்தது அதன் மூலம் அவர் என்னுடன் நட்பாகினார். குறித்த நணபர் எனது வாட்ஸ் அப் இலக்கத்தை வாங்கி அதனூடாகவும் வாட்ஸ் அப்பில் என்னுடன் தொடர்பு கொண்டார்.

2024 மே 31 ல் எனது முகவரியை கேட்டார். முதலில் நான் இவருக்கு முகவரியை வழங்கவில்லை. பின்னர் தனது பிறந்தநாளை என்னுடன் கொண்டாட இருப்பதாகவும் எனக்கு ஒரு பரிசுப்பொதி அனுப்ப இருப்பதாகவும் கூறி முகவரியை கேட்டபோது, நான் எனது முகவரியை அனுப்பினேன்.

மே மாதம் 31 மாலையில் எனக்கு டெல்டா கொரியர் சேர்விஸ் எனும் நிறுவனத்தினூடாக பொதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜுன் 1 ம் திகதி கொழும்பில் இருந்து தகவல் வரும் என தகவல் அனுப்பினார்.

பின்னர் கொழும்பு டெலிவரி ஏஜன்ட் என்று ஒருவர் மெசேஜ் அனுப்பினார். CLEARANCE FEE 95000/- அனுப்பும்படி கூறினார். இதற்கு நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறினேன்.

அப்போது முதலில் பொதி சம்மந்தமாக முதலில் கதைத்த மார்க் சிமித் என்பவர் எவ்வளவு பணம் இருக்கிறது என தொடர்பு கொண்டு கேட்டார்.

நான் பணம் இல்லை எனக் கூறினேன். பின்னர் 35000/- ரூபா வங்கிக்கு அனுப்ப சொல்லி வங்கி இலக்கத்தை தந்தனர் பின்னர் 40000 ரூபா போடும்படி சொன்னார். இதனடிப்படையில் 03/06/2024 ரூபாய் 40000 ஐ வங்கி கணக்கில் வைப்பிலிட்டேன்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிற்பதாகவும் பொதி ஸ்கான் பண்ணபடுவதாகவும் கூறினார். மேலும் பொறிக்குள் DOLLERS இருப்பதாகவும் அது ஒரு பெரிய தொகை என்றும் கூறி தான் அனுப்பும் வங்கிக்கணக்கு பணம் அனுப்பும் படியும் இல்லாவிடில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பயமுறுத்தினார்.

அதன் பின்னர் ரூபாய் 1 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடச்சொன்னார். அடுத்த நாள் பொதிக்கு INSURANCE COVERAGE இல்லை அதற்கு ரூபா 48ஆயிரம் வைப்பிலிடச் சொன்னார்.

இவை அனைத்தையும் நான் இவர்கள் தந்த கணக்கிற்கு வைப்பிலிட்ட பின்னர் எனது பெயரில் பொதி வந்தால் பெரிய பிரச்சினை என்றார்கள். தை மாதம் 07 ம் திகதி மார்க் அண்டர்சன் தொடர்பு கொண்டார்.

அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். லண்டனில் இருந்து கொழும்பு வந்து வேலை செய்வதாக கூறினார். ரூபா இருபது லட்சம் வங்கியில் வைப்பிலிட்டால் 24 மணி நேரத்துக்குள் பொதியை வழங்குவதாக கூறினார்.

இதற்கு ஆதாரமாக தனது பாஸ்போர்ட் போட்டோவை அனுப்பி வைத்தார்.அதனை நம்பி அவர் சொன்ன வங்கி கணக்கிற்கு நான் இருந்து லட்சம் ரூபாவை வைப்பிலிட்டேன்.

பின்னர்.Airport delivery charge என கூறி ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வைப்பிலிடச்சொன்னார் அதையும் வைப்பிலிட்டேன்.

தற்போது மேலும் ஒருவர் பொதியை தருவதாக கூறி மேலும் 30 லட்சம் ரூபாயினை கேட்டு மிரட்டுகின்றனர் என்னை இந்த பொதி வருகிறது என கூறி இதுவரை 29 லட்சத்து இருபதாயிரம் ரூபாயினை மோசடி செய்து மேலும் என்னை பணம் தர சொல்லி மிரட்டுகின்றனர்.

என்னைத் தொடர்புகொண்ட இலக்கங்கள் மற்றும் வங்கியில் வைப்பிலிட்ட விபரங்கள் என அனைத்தும் என்னிடம் உள்ளது. எனவே மேற்படி மோசடி தொடர்பில் விசாரணை நடாத்தி இழந்த எனது பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

அதேவேளை  நாட்டில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாகவும், மக்கள்  அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email