உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஹோட்டல் உணவருந்த சென்றவர்களை தாக்கிய ஹோட்டல் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

காலியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் உணவருந்த சென்ற சிலரை தாக்கிய சந்தேகத்தில் அந்த ஹோட்டலின் 11 ஊழியர்களை கைதுசெய்து எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை (ஏப்ரல் 16) இரவு உணவு பெற்றுக்கொள்வது தொடர்பாக உணவக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.
இந்தத் தாக்குதலின் போது, கொழும்பைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரும், 14 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்கள் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, தாக்குதலுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஏப்ரல் 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.