உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், 39ஆவது லீக் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை எடுத்தது.
பதிலுக்கு விளையாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளது. இதனால் குஜராத் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.