உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சட்டவிரோதமான முறையில் யாழ் வந்த 06 பேர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நுழைந்த நான்கு இலங்கையர்கள் மற்றும் அவர்களை அழைத்து வந்த இரு படகோட்டிகள் ஆகிய ஆறு பேர் வல்வெட்டித்துறையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த நிலையில், இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் நால்வரும் மீண்டும் இலங்கைக்கு திரும்ப தீர்மானித்ததாகவும், வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த இரு படகோட்டிகள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று, அவர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைத்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தகவல் அடிப்படையில், சட்டவிரோத நுழைவில் ஈடுபட்ட நால்வரும், அவர்களை அழைத்து வந்த இருவரும் கைது செய்யப்பட்டு, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.