போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு இராமு நவரட்ணம்
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி நாப்போலியை வசிப்பிடமாகவும், முடவேம்படி சுன்னாகத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராமு நவரட்ணம் அவர்கள் 26-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
நல்லமுத்து, காலஞ்சென்ற இராசமணி, பொன்னுத்துரை, காலஞ்சென்ற நடராசா, சுப்பிரமணியம், பொன்ராசா, இராசையா, பொன்மலர், தங்கவேலு(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோராணி, காலஞ்சென்றவர்களான சாந்தி, மனோராஜன் மற்றும் சுமதி(சுவிஸ்), இரவிச்சந்திரன், சுதன், கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.