Sunday October 19, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
அரசியல் இலங்கை செய்திகள் செய்திகள்

இரகசியமாக கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம்: சாணக்கியன் சுமந்திரனின் கூட்டுச்சதி அம்பலம்!

January 21, 2025 0 Comment
 இரகசியமாக கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம்: சாணக்கியன் சுமந்திரனின் கூட்டுச்சதி அம்பலம்!

நாடாளுமன்றத்தில் மூத்தவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமை. அந்த அனுபவத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையிலும், எத்தனை தடவை நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற அடிப்படையிலும் தான் வழங்கப்படுவது நாடாளுமன்ற மரபு.

இலங்கை தமிழரசு கட்சி தற்போதைய 10ஆவது நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தின் 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவராக சிறீதரன் இருக்கிறார். சிறீதரன் 2010 இல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

தொடர்ச்சியாக 4 தடவைகளில் இரு தடவைகள் அதிகூடிய வாக்குகளால் யாழ்.தேர்தல் தொகுதி மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவராகவும் இருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் முதல் வரிசையில் மூத்தவர்கள் அடிப்படையிலும், கட்சி தலைவர்களுக்கும் தான் ஆசனங்கள் ஒதுக்கப்படும். இந்த தடவை கட்சி தலைவர் என்ற அடிப்படையில் சிறீதரனுக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறீதரனுக்கு பக்கத்தில் சாணக்கியனுக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழரசுக்கட்சியில் சாணக்கியனைவிட இரண்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசனும், அம்பாறையை சேர்ந்த கோடீஸ்வரனும் இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் 2015 இல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள். அதே 2015 இல் சாணக்கியன், இசைப்பிரியாவை கற்பழித்து பாலகன் பாலச்சந்திரனை கொலை செய்த இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்சவுடன் சுதந்திர கட்சியில் மட்டக்களப்பில் தேர்தல் கேட்டு படுதோல்வியடைந்தவர்.

2020 இல் சுமந்திரன் அழைத்துவந்து தமிழரசுக்கட்சியில் கேட்டு தான் வெற்றி பெற்றார். ஆக, தற்போது தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூத்தவர் என்று பார்த்தால் முதலாவதாக சிறீதரனும் இரண்டாவதாக சிறீநேசன், கோடீஸ்வரனுமே காணப்படுகிறார்கள்.

ஆனால் மூத்தவர் வரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள சாணக்கியனுக்கு முதல் வரிசையில் ஆசனம் வழங்கப்பட்டிருக்கிறது. இது எப்படி நடந்தது என்று நாடாளுமன்றத்தில் விசாரித்தால், பெரும் தில்லாலங்கடி விளையாட்டு ஒன்று சிக்கியிருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சத்தியலிங்கம், நாடாளுமன்ற செயலாளருக்கு முகவரியிட்டு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அதில் “தமிழரசுக்கட்சி சார்பாக கோப் குழுவில் கௌரவ சிறீதரன், கொரவ சாணக்கியன் ஆகியோர் உள்ளார்கள், ஆதலால் கட்சி தலைவர் சிறீதரனுக்கு அருகில் முதல் வரிசையில் சாணக்கியனுக்கும் ஓர் ஆசனம் வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என ஒரு கடிதம் 2024 நவம்பர் மாதம் அனுப்பியிருக்கிறார்.

தமிழரசுக்கட்சிக்கு நாடாளுமன்ற குழு இருக்கிறது, கட்சிக்கான ஒரு கட்டமைப்பு இருக்கிறது. இவற்றை எல்லாம் கேட்காமல், கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரையே கேட்காமல் சத்தியலிங்கம் தன்பாட்டில் கடிதம் அனுப்பி இருப்பது ஒரு கீழ்த்தரமான கேவலமான செயற்பாடு என கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் விசனம் தெரிவிக்கிறார்கள்.

சத்தியலிங்கத்தின் இந்த செயற்பாடு கட்சியை அழித்து சிதைக்கும் சுமந்திரன் தரப்பிற்கு சார்பாகவே தொடர்ந்து இருப்பது அம்பலப்பட்டிருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் சாணக்கியனுக்கு முதல் வரிசையில் இடம் வழங்கப்பட்ட குறித்த பிழையான நடைமுறையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற குழுவின் தலைவர் சிறீதரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற செயலாளருக்கு விடயத்தை தெரியப்படுத்தி மூத்தவர் அடிப்படையில் முதல் வரிசை ஆசனத்தை வழங்கும்படி சிறீதரன் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரியவருகிறது

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email