உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலத்திரனியல் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களில் பாரிய மோசடி

இலங்கை வெளிநாடுகளில் பணியாற்றும் நாட்டினரை இலக்காகக் கொண்டு, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் நடைபெற்ற சமீபத்திய கோபா குழுக் கூட்டத்தின் போது இந்த தகவல் வெளிச்சமிற்றது. இம்மோசடிகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் குழுவினர் வலியுறுத்தினர்.