போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
இலங்கையில் லஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்
1905 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பொதுச் சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று (4) அறிவித்துள்ளது.
மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சேவையாற்றுவோரின் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
மேலும், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் பொதுப் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் இலஞ்சம் அல்லது ஊழல் நடவடிக்கைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு 1954 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனுப்பி வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.